Monday, November 26, 2018

தலைவன் உதித்தான்!

விழிகள் கரைய
இதயம் உறைய
தெருவில் கிடந்தோம்!

வழிகள் நெடுக
குருதி பெருக
செத்துக் கிடந்தோம்!!

நாயின் கிழாய்
காய்ந்த சருகாய்
மிதித்து போனான்!

ஒளியின் வடிவாய்
துணிவின் உருவாய்
தலைவன் உதித்தான்!

வளைந்த முதுகை
தொலைந்த உணர்வை
நிமிர்த்தி எடுத்தான்!

கண்கள் துடைத்து
நெஞ்சை நிமிர்த்தி
தமிழன் நடந்தான்!

எதிரி நடுங்க
உலகம் வியக்க
புதிய சரிதம் எழுதி
மகிழ்ந்தான்!