கரும்புலிகள்
அவர் பெயர்
உச்சரிக்கும் போதே!
உள்ளம் கால் தொடங்கி
உச்சி வரை விர் என்று
பரவும் உணர்வு பிரவாகம்!
எந்த தூரிகைக்குள்ளும்
அடக்கமுடியா ஓவியங்கள்!
கற்பனை கடந்த
சோதிகள்!
அடிமுடி தெரியா
அற்புதங்கள்!
பலவீனமான இனமொன்றின்
பலமாய் இருந்தவர்!
தாவிவந்த பகை
அழித்து
கந்தக நெடியாய் காற்றில்
கலந்தவர்!
புறந்தமிழ் சொன்ன
மறத்தமிழ் வீரர்!
புகழதை விஞ்சிய
எங்களின் வீரர்!
இறந்தவர்களுக்காய்
அழுதவர் மத்தியில்
அழுதவர்களுக்காய்
வெடிசுமந்தார்!
இனி இங்கே மலரும்
சின்னப்பூக்கள்
வாடாதென
சிரித்தபடி கையசைத்து
சென்றார்!
வாழும் போதும்
சாகும் போதும்
மற்றவருக்காய்
வாழ்ந்த தெய்வ பிறவிகள்!
குனிந்த தலைகளை
நிமிர்ந்திட வைத்தவர்!
எல்லைச்சாமியாய்
எங்களை காத்தவர்!
சந்ததி வாழ்ந்திட
தம்மையே தந்தவர்!
காலம் உள்ளவும்
பெருவெளியில் காற்றாய்
முற்றத்து மல்லிகையாய்
கரை தழுவும் கடலலையாய்,
உதிரத்தோடு கலந்த உள்ளுணர்வாய்,
என்றும்
எங்களுடன் வாழ்வீர்!
No comments:
Post a Comment