இதுவொன்றும்கனவல்லமறப்பதற்க்குஈழத் தமிழ் இனத்தின்ஆயிரம் காலத்து வலி!கள்ளிச் செடியும்முளைகொள்ளமறுக்கும்கந்தக பூமியில்கொத்து கொத்தாய்எம்மை கொன்றழித்தவனைஎப்படி மறப்போம்!பாதுகாப்பு வலயம் எனும்கொலை வளையமிட்டுகூண்டோடு எமை அழித்தசமாதனத்திற்க்கானயுத்தம் என்ற உன்நயவஞ்சக த்தைத் தான் மறப்போமோ!எங்கள் குருவிக்கூட்டைகலைத்து,குஞ்சுகளை தீயில் இட்டுபொசுக்கியஉன் கைகளைஎப்படித்தான்பற்றுவோம்!இதுவொன்றும்கனவல்லமறப்பதற்க்குஈழத் தமிழ் இனத்தின்ஆயிரம் காலத்து வலி!இரத்தமும் சதையுமாய்முள்ளிவாய்க்காலில்காற்றோடு கரைந்தஎங்கள் காவல் தெய்வங்களைமறந்திடத்தான் இயலுமோ!பூ என்றும்,பிஞ்சென்றும்மூப்பென்றும் பாராமல்எங்கள் இனத்தைவேரறுத்த வஞ்சகரைஎப்படி நாம் மறப்போம்!வந்தாரை வாழ வைத்தஇனமொன்றைநந்திக்கடல் வெளியில்கஞ்சிக்காய் அலையவிட்டஉன் கொடுமையைத்தான்மறப்போமோ!?நாயும் தீண்டா பிண்டமெனவீதியெங்கும் பிணமாகிநம் சொந்தங்கள்கிடந்ததைத்தான்மறப்போமோ?இதுவொன்றும்கனவல்லமறப்பதற்க்குஈழத் தமிழ் இனத்தின்ஆயிரம் காலத்து வலி!நரம்பினில் ஏற்றிஉருக்கொள்வோம்!வீழ்ந்த எங்கள்உறவுகளைநினைவில் கொள்வோம்!நீதி ஒருபோதும்பொய்த்தில்லை.வஞ்சகர் ஒரு நாளும்வாழ்ந்ததில்லை!மறுக்கப்பட்ட நீதிக்காய்நம்பிக்கையோடுபோராடுவோம்.காலங்கள் ஓடும்காட்சிகள் மாறும்.எங்கள் வானத்திலும்வெள்ளிகள் முளைக்கும்!இயற்கை எனது நண்பன்,வரலாறு எனது வழிகாட்டிஎனச் சொன்னஎங்கள் தலைவனின்ஓர்மத்தை நெஞ்சினில் தாங்கி ,வலிகளை நரம்பினில் ஏற்றி ,அறம் வெல்லும் எனும் நம்பிகையைநினைவினில் கொண்டுவிடியல் தெரியும்வரைதொடர்வோம் பயணம்!இதுவொன்றும்கனவல்லமறப்பதற்க்குஈழத்தமிழினத்தின்ஆயிரம் காலத்து வலி!